தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

வியாழன், 13 ஜனவரி, 2011

அழகான முகம் வேண்டுமா?



உடல் அழகைப் பராமரிப்பதற்கு நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள் உதவியான உள்ளன. சருமம் முதல் முடி வரை, அனைத்தையும் பராமரிப்பதற்கு, பழங்கள் மற்றும் காய்கறிகளில் பப்பாளி, மாம்பழம், ஸ்ட்ராபெர்ரி, அவகேடோ, கேரட் மற்றும் பலவற்றை பயன்படுத்தியிருப்போம். ஆனால் காய்கறிகளில் ஒன்றான பூசணிக்காயை வைத்து அழகைப் பராமரிக்கலாம் என்பது பற்றி தெரியுமா?

ஆம், உண்மையில் சமையலில் பயன்படும் பூசணிக்காயை வைத்து சருமத்தை அழகாக்க முடியும். ஏனெனில் இதில் வைட்டமின்களான ஏ, சி, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. அதிலும் இதில் உள்ள ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன், ரெட்டினோயிக் ஆசிட் போன்றவை, சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கவும், பழுப்பு நிற சருமத்தை பொலிவாக்கவும் பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதனை முடிக்கு பயன்படுத்தினால், அதில் உள்ள பொட்டாசியம் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.

இப்போது இந்த பூசணிக்காயை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் போடலாம் என்றும், எந்த பொருளுடன் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம் என்றும் பார்க்கலாமா…

* பூசணிக்காயின் கூழை எடுத்து, தினமும் 10 நிமிடம் முகத்திற்கு தேய்த்து ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவாக இருக்கும்.

* பூசணிக்காயின் கூழை, முட்டையின் வெள்ளைக்கருவுடன் சேர்த்து கலந்து, அத்துடன் சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொண்டு, அந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்கி, முகம் அழகாகக் காணப்படும்.

* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு இந்த முறை சரியானதாக இருக்கும். அதற்கு பூசணிக்காயை நன்கு மசித்து, அதில் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

* முகம் கருப்பாக காணப்பட்டால், அதனை போக்குவதற்கு, பூசணிக்காய் கூழுடன், சிறிது சர்க்கரை மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 4-5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள கருமை நிறம் மங்குவதோடு, பருக்கள் நீங்கி, கரும்புள்ளிகளும் மறைந்துவிடும்.

* இந்த முறையில் ஃபேஸ் பேக்குடன், ஸ்கரப்பும் உள்ளது. அதற்கு மசித்த பூசணிக்காயில், கடலை மாவை சேர்த்து, சிறிது பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் அனைத்து சருமத்தினருக்கும் நல்ல பலனைத் தரும். அதிலும் இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்ய வேண்டும்.

* பூசணிக்காய் கூழுடன், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து, இறுதியில் குளிர்ச்சியான நீரில் கழுவிட வேண்டும்.

* இந்த ஃபேஸ் பேக், பழங்களைக் கொண்டு ஃபேஷியல் போட்டது போன்ற தீர்வைத் தரும். அதற்கு பூசணிக்காய் கூழை, பாதாம் பொடியுடன் சேர்த்து, தேன் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, காய வைத்து, நீரில் கழுவ வேண்டும்.

* முகப்பருவில் இருந்து விடுபட வேண்டுமெனில், இந்த முறையை பின்பற்றுங்கள். அதுவும் சந்தனப் பொடியை, பூசணிக்காய் கூழுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். வேண்டுமெனில் அத்துடன் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் முகப்பருக்கள் முற்றிலும் நீங்கிவிடும்.

புதன், 12 ஜனவரி, 2011

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

வெள்ளி, 7 ஜனவரி, 2011

வியாழன், 6 ஜனவரி, 2011